Sunday, August 24, 2014

கை (யால எதையாவது) எழுத்து பத்திரிக்கை

என் அக்கா லக்ஷ்மி, சமீபத்தில் சூரியன் FM நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்று வைரமுத்து கையால் விருது வாங்கினார்.

உடனே எனக்கு எனது இளம் வயதில் நான் கவிதை எழுத முயன்று தோற்ற நாட்கள் ஞாபகம் வந்தது.
 
இந்த நாட்களில் நமது பிள்ளைகள் வீடியோ கேம்ஸ்ல்  எவ்வளவு கட்டாயமாக திறன் பெற்றிருக்க வேண்டுமோ - அந்த நாட்களில் கைஎழுத்து பத்திரிக்கை நடத்துவது ஒரு கட்டாயமாக இருந்தது (என்னது? ஒரு பத்திரிக்கையும் நடத்தலையா? அப்போ நல்லா படிச்சு டாக்டர் ஆவரா மாதிரி ஐடியா ஒ? - என்று கடிந்து கொள்வார்கள், ஏற்கனவே நடத்துபவர்கள்.)
 
இந்த மாதிரி ஒரு இக்கட்டில் நாங்களும் மாட்டிக் கொண்டோம். என்னடா இது? ஒருத்தனும் நம்மளை மதிக்க மாட்டானோ என்ற பயம் எங்களை ஆட்ட ஆரம்பித்தது. 
 
நான், பரணி, மஹேஷ் (எங்கள் பேட்ச்சில் நாங்கள் மூவரும் ஓரளவுக்கு இலக்கிய சர்ச்சை நடத்துவோம். "சுஜாதா பொம்பளை இல்லியாமே?" "டே. இது கூட தெரியாதா? கண்ணகி தெருவுக்கு leftல கட் பண்ணினா தொல்காப்பியர் தெருடா" "கம்பர் நல்லா சிலம்பம் ஆடுவாராமே" என்பது போல பல சர்ச்சைகள் செய்வோம்) மூவரும் இந்த சிக்கலில் இருந்து எப்படியாவது வெளி வர - ஒரு கை எழுத்து பத்திரிக்கை நடத்த முடிவு செய்தோம்.
 
முதலில் எவ்வளவு பக்கம் எழுதணும் என்று ஒரு சந்தேகம். எனவே அக்கம் பக்கத்து கை எழுத்து பத்திரிகளை ஆராய்ந்தோம். கமலம், யௌவனம், மகரம், சிம்மம் என்று பல பத்திரிக்கைகள் கை மாறி கொண்டு இருந்தன அந்த நாட்களில். பாதி பத்திர்க்கை எழுதிகொண்டிருக்கும்போதே சிலர் பிரிந்து விடுவார்கள். ஒரு பாதி ஒரு எழுத்தும் மறு பாதி வேறு எழுத்தும் இருக்கும். பெரும்பாலானவை 40-50 பக்கங்கள் இருந்ததை கண்டு பிடித்தோம் (டே, அந்த பிரபாகரன் பத்திரிக்கையை விடுடா. அவன் 200 பக்கத்துக்கு எதையாவது எழுதுவான். அவங்க அப்பா stationery ஷாப் ஓனர்.) அந்த பிரச்சினை விட்டது.
 
அதற்கு பிறகு - அடுத்த பிரச்சினை. என்னடா பேரு வெக்கறது? எல்லா ராசி பேரும், நட்சத்திர பேரும் already வெச்சுட்டானுங்க. ஒன்லி மிருகசீருஷம் is available. அடிப்பானுங்க. 
 
பரணி பெருமையாய் சொன்னான் - இல்லடா. என் பேரை வுட்டு வச்சிருக்கானுங்க. actualஆ அந்த பேருல என் கசின் எழுத ஆரம்பிச்சான். நல்ல வேளையா அவனுக்கு சீக்கரமே வேலை கிடைச்சு ஒரிசா போயிட்டான். 
 
பெயர் கிடைத்து விட்டது!
 
என்ன எழுதுவது? - அட அத விடுடா. first, யார் எழுதுவது? சர்ச்சை எதுவும் இன்றி, எங்கள் மூவரில் மிக குறைவாக படிப்பில் சமயம் செலவழிப்பது நானாக இருந்தேன். என் பெயருக்கு அந்த வோட்டு சுலபமாக விழுந்தது.
 
எல்லாம் ரெடி. இப்ப யோசிப்போம்டா - என்ன எழுதுவது? "ராயல் சோடா" கடையில் மணி கணக்கில் பன்னீர் சோடா குடித்துக்கொண்டே யோசிப்போம்.
 
அப்போதுதான் ஒரு முறை பேச்சு வாக்கில் நான் சொன்னேன் - டேய் நான் ஒரு கவிதை எழுத ட்ரை பண்ணினேன். எதையும் முன்னேற்பாடோடு செய்ய வேண்டும் என்று எழுத ஆரம்பிக்கும்போதே பேனாவில் இங்க் தீர்ந்து போச்சுடா.
 
மற்ற இருவரும் - ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். எதாவது தப்பா சொல்லிட்டோமோ என்று நான் யோசித்தேன்.  
 
"அடடா. இதையே ஒரு புது கவிதையா எழுதுடா." என்றார்கள். அதன் பிறகு என்னை புது கவிதை production departmentல் போட்டு விட்டார்கள். நான் தலையை பிய்த்துக்கொண்டு என்னனோமோ எழுதி பார்ப்பேன். என்னடா இது - தெரியாம சொல்லி மாட்டிக்கொண்டோமே என்ற கவலை என்னை பிடித்துக்கொண்டது. சரி - அது போகட்டும் ஏனெனில் அதை என் சொந்த பிரச்சினையாக விட்டு விட்டார்கள். அதை விட பெரிய பிரச்சினை - எப்படி 40 பக்கங்களை நிரப்புவது? அதுவும் மாதா மாதம்?
 
அப்போதுதான் புரிந்தது. எங்கள் கையில் போதுமான சரக்கு இல்லையென்று. "டே. ஏதாவது படம் வரைடா." - "அதுதான் already நிறையா வரைஞ்சுட்டோமேடா. ஏதாவது எழுத வேணாமா?" எங்கள் கையில் இருந்த கவிதை கதை சரக்கெல்லாம் முதல் 2-3 மாதங்களில் போணியாகிவிட்டது. கதை விவாதம் கவிதை விவாதம் ரொம்ப ஜாஸ்தியாகி, ராயல் சோடா கடையில் எங்களை ban செய்து விட்டார்கள். "டே, பன்னீர் சோடா கடன் கணக்கு கூட போச்சுடா இனிமே" என்று வருந்தினோம். ராயல் சோடாவில் போர்டே போட்டு விட்டார்கள் - cash & carry & get lost.
 
சரி- நம் சக பத்திரிகையாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று விசாரித்தோம். "எனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் எல்லாம் தெரியும். சிம்ப்ளா அந்த பாஷை பத்திரிகைளில் இருந்து மொழி பெயர்த்துடுவேன்" (ஐயோ தெரிஞ்சா நம்மளை பேர்த்திடுவானுங்களே?). "எனக்கு எங்க பெரியப்பா அவரோட rejected  கதை எல்லாம் ஒரு 20 நோட் புக் வுட்டுட்டு போயிருக்காரு (அடடா, எழுதி எழுதி போயே சேர்ந்திட்டாரா?).  
 
இப்போதெல்லாம் - "என் blog. என் laptop. என் இஷ்டம்" என்பதுபோல் அந்த காலத்தில் கை எழுத்து பதிரிக்கைகளுக்கேன்றே freelance writers இருந்தார்கள். சற்று வினோத பேர்வழிகள். எங்கள் stock shortage ரொம்ப நெருக்கடி நிலைக்கு வந்து விடவே (வெறும் வெள்ளை பக்கங்கள் தினமும் தூக்கத்தில் வர ஆரம்பித்து விட்டது) - நாங்கள் இந்த freelancersஐ அணுக முடிவு செய்தோம்.
 
திருக்குறள் டேனியல் - ரெண்டுக்கும் என்னடா சம்பந்தம் என்கிறீர்களா? ரொம்ப கேட்க முடியாது. அவன் எங்க ஊரில் ஜிம் நடத்துபவன். ஆட்களை அடிக்கும் profession. அது போக கிடைக்கும் சமயங்களில், திருக்குறள் விளக்கவுரை எழுதுவான். (பிறகுதான் தெரிய வந்தது. இந்த திருக்குறளை வைத்து பல பேர் ஆடி வருகிறார்கள் என்று. திருக்குறள் இரண்டடி உரை. திருக்குறள் நான்கடி உரை என்று சுமார் 200 அடி வரை இழுத்து எழுதுகிறார்கள் என்று (இழுத்தாளர்கள்?). ஒரு ஆசாமி இந்த விளக்கவுரையை 2000 பக்கங்கள் எழுதியிருக்கிறார் (மொத்தமே 1330 (தானே?) குறளை இப்படி அடித்து பின்னுகிறார்களே என்று எங்களுக்கு ஆச்சரியம். நிச்சயம் கை எழுத்து பத்திரிக்கை நடத்துபவர்களாகத்தான் இருக்கும்.) ஒரு 2-3 பக்கங்களுக்கு இவரை வைத்து நிரப்பலாம் என்று அவரை அணுகினோம்.
 
: வா தம்பி. என்ன இப்பல்லாம் ஜிம் சைடே வரதில்லே?
: இல்ல சார். படிப்பு கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு (பொய் சொன்னால் அடிப்பாரோ?)
: சரி சரி. என்ன இந்த பக்கம்?
: இல்ல சார். எங்க கை எழுத்து பத்திரிக்கையில் உங்க திருக்குறள் எழுத்தை கொஞ்சம் எழுதலாம்னு..(பயத்தில் ரொம்ப எழுத்தாயிடுச்சோ?)
: அப்படியா. சந்தோசம். ஆனா, நான் 50 குறளுக்கு கம்மியா எழுதறதில்லை (என்னடா இது? ஏதோ 10 ஆளுக்கு கம்மியா  அடிக்கரதில்லைங்கற மாதிரி இருக்கே?) 
 
வசமாக மாட்டிக்கொண்டோம். இப்போ வேண்டாம்னும் சொல்ல முடியாது.
 
: சரி சார். அதை 2-3ஆ பிரிச்சு எழுதிக்கிறோம். அது சம்மதமா?
: அதான் சொன்னேனே. 50க்கு கம்மி கிடையாதுன்னு? (என்னடா இது? இப்படி கறாரா பேரம் பேசறாரே?)
: சரி சார். எடுத்துக்குறோம். (வேண்டாம்னு சொன்னால் குறள்-வளைக்கவுரை ஆயிடுமே?) 
: அப்ப சரி. டே, திருவாசகம்.. (டேனியல் வீட்டுலே திருவாசகமா?), ஒரு 50 குறள் குடுத்து வுடு (என்னடா இது. ஏதோ கத்திரிக்காய் மாதிரி சொல்றாரே? சரியா புரிஞ்சிகிட்டரா நாம சொன்னதை?)
 
திருவாசகம் அவரை விட தாட்டியாய் அவரை விட கருப்பாய் முறுக்காக இருந்தான். அவன் இடுப்பில் ஒரு சின்ன அறுவாள் (ஒரு வேளை  அறுவாசகமோ). அவர் கொடுத்ததை மறு பேச்சில்லாமல் வாங்கி கொண்டு பறந்தோம்.  மொத்தம் 32 பக்கங்கள்! செத்தோம்டா .
 
அடுத்தது - "கவிதை வேந்தன்" அறிவு மொழி. எங்கள் ஊர் MLAவின் தம்பி. அவர் பிறர் பிரச்சினையில் தலையிட மாட்டார். அதே போல் மற்றவர் கவிதை எழுதினாலும் அவருக்கு பிடிக்காது. எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்டார் - ஏதோ நாங்கள் ஒரு வாரமாய் தண்ணீர் வரவில்லை என்று மனு கொடுப்பதுபோல்..
 
: இது வழக்கம்தான். முயற்சியை கை விடாதீர். என்னிடம் கவிதைக்கு பஞ்சமா? பிடியுங்கள்.
 
ஒரு 40 பக்கம் நோட் புக்! போச்சுடா. அடுத்த அடியா?
 
இப்படியாக எங்கள் freelancers விஜயங்கள் ("தென்றல் புயல் புருஷோத்தமன்" , "மல்லிகை வாசன் அரவிந்தன்" "பறவை பத்மநபான்" என்று பல) மென்மேலும் மறுக்க முடியாத பக்கங்களை சேர்த்தன. ஒரு 10 நாட்களில் நாங்கள் ஒரு 300 பக்க கட்டாயத்தில் தள்ளப்பட்டோம்.
 
இதை யார் எழுதுவது? நான் என் resignationஐ  வருத்தத்துடன் சமர்ப்பித்தேன்.
 
அதை வாங்க மற்ற இருவரும் காணவில்லை!

1 comment:

  1. அந்த பத்தகையும் நீங்கள் ரைந்த படங்களும் இொழுது என் கண் முன்னே. அமை நண்பா!

    ReplyDelete